Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மீண்டும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Rain
, வியாழன், 19 ஜனவரி 2023 (14:05 IST)
தமிழகத்தில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இனி வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா ஒட்டிய மாவட்டங்களில் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் மீண்டும் மழை என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு எங்களுடைய தொகுதி.. கே.எஸ்.அழகிரி பேட்டி!