சட்டென மாறியது வானிலை..அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கை..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:03 IST)
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் இன்று காலை வெளியான வானிலை அறிக்கையில் கூட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்ட நிலையில் அடுத்த ஏழு நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வட தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments