Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ம்ஸ் மருத்துவர்கள் கருத்து தவறானது: சிறை கண்காணிப்பாளருக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:57 IST)
சிறை கண்காணிப்பாளருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறிய கருத்து தவறானது என கூறியுள்ளார்.
 
திகார் சிறை கண்காணிப்பாளருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதத்தில் நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் போது அவரது சர்க்கரை அளவு கூடியதாக கூறப்பட்ட நிலையில் இன்சுலின் மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதற்கு டெல்லி திகார் சிறை அதிகாரிகள் பதில் அளித்த போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்சுலின் கேட்கவில்லை என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சோதனை செய்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததாகவும் கருத்துக்கள் வெளியானது. 
 
இதனை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தவறானது என்றும் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற தகவலும் தவறானது என்றும் கடிதம் எழுதியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments