Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீர் மழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (20:30 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை , மயிலாப்பூர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த மழை காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments