தமிழகம் முழுவதும் பரவலான மழை.. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (07:50 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக காற்று திசை வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பெரிதும் உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது. நேற்று மாலை முதலே சென்னையில் நல்ல வேலையில் மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னை மக்கள் நேற்றிரவு குளிர்ச்சியான தட்ப வெப்பத்தை அனுபவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments