Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் 2 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

இன்னும் 2 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:40 IST)
தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட தகவலில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

68.65 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!