Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 19 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:37 IST)
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கன மழை வர பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இன்று 19 மாவட்டங்களில்  நள்ளிரவு ஒரு மணி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments