Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்
, செவ்வாய், 4 ஜூலை 2023 (07:22 IST)
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடைகாலம் முடிவடைந்து தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும் என்றும், இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்ற.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை.. நிபந்தனைகள் உண்டா?