Publish Date: Sat, 05 Jun 2021 (20:34 IST)
Updated Date: Sat, 05 Jun 2021 (20:38 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை வானிலை மையம் 10மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி விருதுநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.