Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (09:46 IST)
தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி முதல் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், இன்றும் அதே போல் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் மார்ச் 9ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அதே நேரத்தில் மார்ச் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments