Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

Siva
வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:04 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று சில மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிக்கு விடுமுறை என்றும் சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று, அதாவது நவம்பர் 29 ஆம் தேதி, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

சற்றுமுன் வந்த தகவல்படி, சென்னையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடர்ச்சியான மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments