Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (17:10 IST)
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களில் சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகும் வாய்ப்புள்ளது.
 
வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னலுடன் பெய்யக்கூடும். சில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசும்.
 
செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசான மழை மற்றும்
செப்டம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
 
இன்றும் நாளையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னலுடன் பெய்யும். வெப்பநிலை அதிகபட்சம் 34°C, குறைந்தபட்சம் 28°C ஆக இருக்கும்.
 
மேலும் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 26 வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில், இடையிடையே 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments