Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (15:35 IST)
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஜூன் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்காலில் இயல்பை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments