Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Rain
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:43 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்தது என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஏழு மாவட்டங்களில் விவரங்கள் பின்வருமாறு:
 
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தேனி
தென்காசி
விருதுநகர்
நெல்லை
கன்னியாகுமரி
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..!