Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

Senthil Velan
சனி, 28 செப்டம்பர் 2024 (18:32 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
 
மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இலங்கை கடற்படையால் கடந்த 21ஆம் தேதி கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ALSO READ: பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!
 
இலங்கை அதிகாரிகளுடன் பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments