Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை நேரில் பார்த்தேன் : ராகுல்காந்தி பேட்டி

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (16:42 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. 
 
தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரலங்கள் பலரும் தினமும் மருத்துவமனை வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். 
 
இந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். டெல்லியிலிருந்து சரியாக  3.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து காரில் நேராக காவேரி மருத்துவமனை சென்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினோடு சேர்ந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்று சந்தித்தார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதியை தீவிர சிகிச்சை பிரிவில் நேரில் சென்று பார்த்தேன். அவர் நன்றாக இருக்கிறார். தமிழக மக்களை போல் அவரிடம் நல்ல மன உறுதி இருக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் பல வருடங்களாக நட்பு பாராட்டி வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments