Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த மாமனிதருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள் - ராகுல்காந்தி வேண்டுகோள்

அந்த மாமனிதருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள் - ராகுல்காந்தி வேண்டுகோள்
, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (22:22 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தாருங்கள் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். 
 
மெரினாவில் கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
webdunia
இதனால் ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் போராட்டம், நடத்தி வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மக்களின் குரலாக இருந்த மதிப்புமிக்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்வதே சரியானது. ஆகவே தமிழக அரசு கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் இடம் கொடுங்கள் - கருணாநிதிக்காக கெஞ்சும் ரஜினிகாந்த்