Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்: பிரச்சாரத்திற்கு வருகிறாரா ராகுல் காந்தி?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (16:32 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வர வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின. 
 
இந்த நிலையில் இன்று சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வர வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வசம் இருந்த நிலையில் அந்த தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments