Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:17 IST)
இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதுமட்டுமின்றி ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லியில் ராகுகாந்தி தலைமையிலும், டெல்லியின் இன்னொரு பகுதியில் பிரியங்கா காந்தி தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையில் அமர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் தனித்தனியே டெல்லி காவல்துறை கைது செய்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உள்பட பல்வேறு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்..!

பிரதமரை சந்தித்த இசைஞானி இளையராஜா.. சிம்பொனி குறித்து பேசியதாக பதிவு..!

வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக அறநிலையத்துறை வெளியேற வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை!

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments