Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை! – 7 மாணவர்கள் கைது!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (10:39 IST)
கோவையில் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ரேகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தும் ரேகிங் சம்பவங்கள் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் அதையும் தாண்டி சில கல்லூரிகளில் சீனியர் மாணவர்களின் ரேகிங் கொடுமைகள் அவ்வபோது நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் சீனியர் மாணவர்கள் சேர்ந்து ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகவும், அவர் தராததால் தலையை மொட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 7 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!

கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசு தான் காரணம்: இந்து முன்னணி

அடுத்த கட்டுரையில்
Show comments