Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐந்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:42 IST)
சென்னை ஐந்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை
பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான ராடிசன் புளூ ஹோட்டல் உரிமையாளர் அமித் ஜெயின் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ராடிசன் ப்ளூ ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபரான அமித் ஜெயின் காசியாபாத் காமன்வெல்த் விளையாட்டு கிராம சொசைட்டி இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலை டெல்லி காவல் நிலையத்திற்கு அவருடைய ஓட்டுநர் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று அமித் ஜெயின் உடலை மீட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது 
 
இது வரை சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை என்றாலும் மர்மமான முறையில் தொழிலதிபர் அமித் ஜெயின் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ரேடிசன் புளூ சர்வதேச தரத்தில் உள்ள ஓட்டல்களில் ஒன்றாகும். சென்னை விமான நிலையத்திலிருந்து வெகு அருகில் உள்ள இந்த விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் பலர் தங்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments