Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூவி அழைத்தாலும் தடுப்பூசி போட வருவதில்லை! – மருத்துவத்துறை செயலாளர்!

கூவி அழைத்தாலும் தடுப்பூசி போட வருவதில்லை! – மருத்துவத்துறை செயலாளர்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (13:21 IST)
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ”கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக சென்று கூறியும் சிலர் முன்வருவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!