Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் எந்திர கோளாறு; உயிர் தப்பிய பயணிகள்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (08:32 IST)
சென்னையிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல நாடுகளுக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. அந்த வகையில் இன்று சென்னையிலிருந்து டோஹா நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

விமானம் கிளம்பி ஓடுபாதையில் பறப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டத்தை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக விமானத்தை நிறுத்தியதுடன் விமான கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விமானி தக்க நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments