Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உருவாகிறது புரெவி புயல்: அதி கனமழைக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (13:29 IST)
வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில் தற்போது வங்க கடலின் தென் திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுவடைய உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
அதை தொடர்ந்து டிசம்பர் 2 முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தகவலின் படி வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 
 
மேலும், வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக 1ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிசம்பர் 2ந் தேதி தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments