அதிமுக கூட்டணியில் சீட் இல்லை. புரட்சி பாரதம் கட்சி இன்று அவசர ஆலோசனை..!

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (08:13 IST)
அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று புரட்சி பாரதம் கட்சி சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்த கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்காத நிலையில் அக்கட்சி இன்று அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகள் குறித்த தொகுதிகள் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சி மட்டும் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருப்பதாக புதிய பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான வேட்பாளர்கள் அறிவிப்பில் அனைத்தும் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்துவிட்ட நிலையில் புதிய பாரதம் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் சீட்டு ஒதுக்கப்படாத நிலையில் புரட்சி பாரதம் கட்சி இன்று அவசர ஆலோசனை செய்ய வைப்பதாக கூறப்படுகிறது.  இந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் , ஆலோசனை கூட்டத்திற்கு  கைபேசி கட்டாயமாக அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments