Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (08:07 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் அவருடைய மகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவர் ஒரு அமைப்பை நடத்திவரும் நிலையில் ஓபிஎஸ், பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறிவிட்ட நிலையில் அவர் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஓபிஎஸ் அணிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி நேரத்தில் திடீரென பிரதமர் மோடி அங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது ஓபிஎஸ் தனது தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது நடந்தால் இந்த தேர்தல் பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments