Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (08:07 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் அவருடைய மகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவர் ஒரு அமைப்பை நடத்திவரும் நிலையில் ஓபிஎஸ், பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறிவிட்ட நிலையில் அவர் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஓபிஎஸ் அணிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி நேரத்தில் திடீரென பிரதமர் மோடி அங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது ஓபிஎஸ் தனது தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது நடந்தால் இந்த தேர்தல் பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments