Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான்: அதிர்ச்சியில் குடிமகன்..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:46 IST)
டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான் இருந்ததை அடுத்து அந்த பாட்டிலை வாங்கிய குடிமகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். 
 
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டிலை வாங்கிய குடிமகன் ஒருவர் அந்த பாட்டிலை ஓபன் செய்தபோது உள்ளே ஏதோ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அது பூரான் என்பது தெரிய வந்ததை அடுத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். 
 
உடனே டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் பூரான் இருந்த மது பாட்டிலை காட்டி அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த விற்பனையாளர் சீனாவில் முக்கிய உணவு பூரான் என்றும் அதை பெரிதாக நினைக்க வேண்டாம் என்றும் அலட்சியமாக பதில் கூறினார். மேலும் அந்த மது பாட்டிலை பறித்துக் கொண்டு வேறு பாட்டிலை கொடுத்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மது பாட்டிலை வாங்கிய நபர் கூறியபோது பூரான் மது பாட்டிலில் இருந்ததற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments