பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம்! உதயநிதி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:08 IST)
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில், பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
 
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் - இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் ; கழக பொதுச் செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்து பெற்றோம்.
 
 திமுக இளைஞர்  மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி - எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம்!’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments