Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் கிடந்த 750 சவரன் நகைகள்! புதுக்கோட்டை வழக்கில் திருப்பம்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:16 IST)
புதுக்கோட்டையில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 750 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வ்ழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். திருடப்பட்ட நகை குறித்து பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் நகைகள் கிடந்தது தெரிய வந்துள்ளது. கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து மூட்டையில் கட்டி போடப்பட்டிருந்த நகைகளை போலீஸார் மீட்டு எடுத்துள்ளனர். நகைகளை கிணற்றில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments