Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டை கண்மாயில் விழுந்ததா விமானம்!? – மக்கள் அதிர்ச்சி! உண்மை என்ன?

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (13:07 IST)
புதுக்கோட்டை அருகே மேலவசந்தனூர் கண்மாய் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக வெளியாத புரளியால் புதுக்கோட்டையில் பரபரப்பு எழுந்துள்ளது.

இன்று காலை புதுக்கோட்டை பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. அதை தொடர்ந்து மக்கள் பலர் வானத்தில் விமானம் ஒன்று செல்லும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் எந்த விமானமும் வானில் தென்படவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியருகே விமானம் ஒன்று விழுந்து எரிவதாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் நேரடியாக மேலவசந்தனூர் பகுதியில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலவசந்தனூர் பகுதியில் முட்புதர்கள் மட்டுமே எரிந்து கொண்டிருப்பதாகவும், அங்கு விமானங்கள் எதுவும் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் சமூக வலைதளங்களில் வெளியான இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments