Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் கொலை; அதிமுகவினர் உள்ளிட்ட 10 பேர் கைது! – புதுக்கோட்டையில் பரபரப்பு!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (15:11 IST)
புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் திமுக நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தோட்டத்தில் மாட்டு பண்ணையில் பூஜை செய்து கொண்டிருந்த பாலச்சந்திரனை மர்ம நபர்கள் துரத்தி வெட்டிக் கொன்றுள்ளனர். இதில் பாலச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளாக அதிமுவை சேர்ந்த பாலமுத்து, முருகானந்தம், நந்தக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாலச்சந்திரனுக்கு பழக்கமானவர்கள் என கூறப்படுவதால் இது தனிப்பட்ட மோதல்கள் காரணமாக நடந்த கொலையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments