Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்நேரமும் வீடியோ கேம்; அதீத மன உளைச்சல்! – திடீரென தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (15:22 IST)
புதுச்சேரியில் அதீத வீடியோ கேம் மோகம் காரணமாக பட்டதாரி இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தீபக். பொறியியல் பட்டதாரியான இவர் கொரோனா காரணமாக வீட்டிலேயே இருந்ததால் அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதீதமான வீடியோ கேம் ஈடுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதிகம் யாரிடமும் பேசாமல் அறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீபக் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கேமால் ஏற்பட்ட மன உளைச்சலால் தீபக் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments