புதுச்சேரி சிறுமியை தேடுவதில் அலட்சியம் காட்டிய போலீஸார்! முதல் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

Prasanth Karthick
வியாழன், 7 மார்ச் 2024 (09:26 IST)
புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் முதல் அமைச்சர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.



புதுச்சேரியில் 9 வயது சிறுமியை 6 பேர் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து சாக்கில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதிக் கேட்டு பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு எழுந்துள்ளது.

இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவித்த முதல்வர் ரெங்கசாமி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழுவை ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைத்துள்ளார்.

ALSO READ: ஆரணியில் போட்டியில்லை.. திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்..!

இன்று முதலே விசாரணையில் இறங்கிய சிறப்புக் குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளது.

அதேசமயம் சிறுமி காணாமல் போனதை புகாராக அளித்தது முதலாகவே முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீஸார் மெத்தனமாக நடந்துக் கொண்டதாகவும், அவர்கள் விரைந்து தேடியிருந்தால் சிறுமியை மீட்டிருக்கலாம் என்றும் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் மொத்த பேரையும் பணியிட மாற்றம் செய்து முதல்வர் ரெங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்