புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (17:28 IST)
கடந்த சில மாதங்களாக புதுச்சேரி விமான நிலையம் இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் புதுச்சேரியில் இருந்து சில முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதிக கட்டணம் காரணமாக பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த பிப்ரவரி மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் புதுச்சேரியில் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து தனது விமானங்களை இயக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 72 பேர் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமான சேவை டிசம்பர் 20ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. காலை 10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானம், பகல் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் 5.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு மீண்டும் பெங்களூர் சென்றடையும்

அதேபோல் புதுச்சேரியில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். மறு மார்க்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments