Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடுப்பூசி போடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை: சுகாதார இயக்குனர் எச்சரிக்கை!

தடுப்பூசி போடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை: சுகாதார இயக்குனர் எச்சரிக்கை!
, ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:27 IST)
கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி கடந்த சில மாதங்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியா முழுவதும் இதுவரை 100 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியுள்ளது அம் மாநில சுகாதாரத் துறை. புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அவர்கள் இதுகுறித்து கூறிய போது புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதே போன்று தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு; 2 ஆயிரமாக உயர்ந்த தினசரி பலி! – இந்தியாவில் கொரோனா!