Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (11:42 IST)
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் 
 
எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அவ்வப்போது உயர்த்துக் கொண்டே செல்லும் நிலையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். 
 
இந்த நிலையில் சிலிண்டருக்கான மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுவையை அடுத்து தமிழகம் உள்பட வேறு சில மாநிலங்களிலும் இதே போன்ற மானிய அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments