Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் 25-ம் தேதி வரை: அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (08:34 IST)
அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை விடுமுறை என புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்தது. 
 
கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குழந்தைகளிடமிருந்து காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக செய்திகள் வருகிறது.
 
இதனை அடுத்து குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 25ஆம் தேதி வரை விடுமுறை என்றும் இந்த விடுமுறை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments