Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்க்: அமைச்சர் பாராட்டு

petrol
, புதன், 4 ஜனவரி 2023 (19:04 IST)
புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா டங்கி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
பெட்ரோல் பங்கில் வரிசையில் நிற்கும் போது பெண்களுக்கு என தனியான வரிசை இல்லாததால் பல பெண்கள் அதிருப்தியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். 
 
மேலும் இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப் பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இது குறித்து கூறிய போது இதே போன்று அனைத்து பெட்ரோல் மையங்களிலும் பெண்களுக்கென தனி பங்க் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்.. ரஷ்ய இளைஞரிடம் போலீஸ் விசாரணை!