Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:39 IST)
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை. 

 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக  சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டது. 
 
அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை வைத்து குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து பற்றாக்குறை காரணமாக மக்கள் பாதிப்பில் இருந்தனர். 
 
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்துள்ளது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments