Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் களிக்கும் மக்கள்... கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:23 IST)
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை கடற்கரைகளில் மக்கள் கூடியதால் சென்னையில் தொற்று பரவக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 1,990 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆகஸ்டு 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளி அரங்கங்களில் கூட்டங்கள், மெரினா கடற்கரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கடற்கரைகளுக்கு செல்ல தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனையும் மீறி ஞாயிற்றுகிழமையான நேற்று பலரும் கடற்கரைகளுக்கு சென்றனர். மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால், அதன் அருகில் இருக்கும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட சிறிய கடற்கரைகளுக்கு சென்றனர். பலரும் முகக்கவசத்தை அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் கடற்கரைகளில் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments