Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்குத் தடை

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (08:02 IST)
காணும் பொங்கலையொட்டி இன்று சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
காணும் பொங்கலையொட்டி மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு கொண்டாட கடற்கரை பகுதிகளுக்கு படையெடுப்பார்கள். மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதுதவிர கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். பொதுமக்கள் கூடும் இடங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
 
மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுளன. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. போலீசாரின் தடையை மீறி அத்துமீறுபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக  உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில்  2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments