Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலில் பொதுமக்கள் இதற்காக மட்டும் பயணிக்கலாம்: தெற்கு ரயில்வே புது அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:33 IST)
பொது மக்கள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
 
கொரொனா பாதிப்பு துவங்கியது முதல் பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக் இதில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் ரயில்வேத்துறை முழுமையாக செயல்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மின்சார ரயில்கள் பொதுமக்களுக்காக இன்னும் இயக்கப்படாமலே உள்ளது. 
 
ஆனால், சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
எனவே பயணிகள் வசதிக்காக இதுவரை நாள் ஒன்றுக்கு 150 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments