யார் புத்திமதியும் எங்களுக்கு தேவையில்ல..! – விளாசிய அமைச்சர் பிடிஆர்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (13:00 IST)
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் இலவச திட்டங்கள் குறித்து விளாசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மாநில அரசுகள் தொடர்ந்து இலவசங்களை வழங்கி வருவதால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக சில நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகமான இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் காணொலியில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தி தொகுப்பாளர் இலவசம் குறித்து பேசியபோது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது இலவசமா என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்ற மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கம்பேர் செய்து பிடிஆர் பேசியிருந்தது வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “இந்திய வரலாற்றில் உலகத்தின் சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சர்வாதிகாரமாக சிலர் வழங்கும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவை இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments