Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் புத்திமதியும் எங்களுக்கு தேவையில்ல..! – விளாசிய அமைச்சர் பிடிஆர்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (13:00 IST)
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் இலவச திட்டங்கள் குறித்து விளாசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மாநில அரசுகள் தொடர்ந்து இலவசங்களை வழங்கி வருவதால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக சில நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகமான இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் காணொலியில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தி தொகுப்பாளர் இலவசம் குறித்து பேசியபோது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது இலவசமா என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்ற மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கம்பேர் செய்து பிடிஆர் பேசியிருந்தது வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “இந்திய வரலாற்றில் உலகத்தின் சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சர்வாதிகாரமாக சிலர் வழங்கும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவை இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments