Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் விசாரணை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:35 IST)
மாணவிகள் பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் விசாரணை
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரிடம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது
 
இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் 3 மணி நேரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்