Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாராகிராமில் குழு அமைத்து விபச்சாரம்.. புரோக்கர் உள்பட 5 பேர் கைது..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (14:58 IST)
இன்ஸ்டாகிராமில் குழு அமைத்து விபச்சாரம் செய்த புரோக்கர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புதுச்சேரியைச் சேர்ந்த அரியாங்குப்பம் என்ற பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து அவர்களது வீட்டிற்கே இளம் பெண்களை அனுப்பி வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசார் ரகசிய தகவல்கள் கிடைத்தது.
 
 இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி மர்ம நபர்கள் வந்து செல்வதை கண்டுபிடித்த போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக சோதனை செய்தனர். 
 
அந்த வீட்டில் இருந்த ஏழு மாத கர்ப்பிணி உள்பட ஐந்து பேர் இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து விபச்சார தொழில் நடத்தி வந்தது உறுது செய்யப்பட்டது. இதனை அடுத்து புரோக்கர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments