Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியை நிர்மலா கைது: போலீஸ் அதிரடி

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (19:13 IST)
தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார்.
 
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
 
பின்னர் மாணவிகளிடம் தவறாக பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பேராசாரியை நிர்மலாவின் வீட்டின் பூட்டை அவரின் உறவினர் முன்னிலையில் போலீசார் உடைத்து அவரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments