Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் முருகன் கைது

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (11:22 IST)
பேரசிரியை நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன்  தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர் போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் முருகனும், கருப்பசாமியும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது.
 
இதனையடுத்து சிபிசிஐடி போலீஸார் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனர்.
இந்நிலையில் தலைமறைவான முருகன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது, அவரை சிபிசிஐடி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பசாமியை பிடிக்க, சிபிசிஐடி போலீஸார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments