பிரியாணியால் ஏற்பட்ட விபரீதம்.... உயிரைவிட்ட சிறுமி!!!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (11:30 IST)
அரக்கோணத்தில் பிரியாணியால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரக்கோணத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு பிரியாணி கொடுத்துள்ளார்.
 
இதனை வீட்டிற்கு எடுத்து வந்த சீனிவாசன் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலையில் ஃப்ரிட்ஜில் இருந்த பிரியாணியை சுட வைத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர்.
 
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவரின் 5 வயது மகள் கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments