Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (13:14 IST)
காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பிரியங்காவின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தி ஏப்ரல் மூன்றாம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு வாக்கு திரட்டுவதற்காக பிரியங்கா காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி குமரியில் பிரசாரம் செய்ய உள்ளார் 
 
அங்குள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் பிரியங்கா காந்தியும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments