Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கை! – அரசுக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (12:04 IST)
மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தும் அரசின் முடிவிற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டு முதலாக கொரோனா பாதிப்பால் பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முழு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது. முழு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் முழு கட்டணம் செலுத்தினால்தான் மாணவர்களின் மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் கறார் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கண்டனங்களை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments